Friday, 22 March 2019

இந்த வருடம் ஆவக்காய்

புளி பொங்கும் மாங்காய் மங்கும் என்ற சொலவடை நினைவில் நின்றாலும் உருண்டையான மாங்காய்களை பார்த்ததும் இதயத்தில் ஏதோவொரு ஜிவ். உடனே மனது கணக்கு போட்டது. ஒரு கிலோ வாங்கினால் எவ்வளவு மிளகாய் வேண்டும், கடுகு எவ்வளவு, உப்பு எவ்வளவு, நல்லெண்ணெய் எவ்வளவு என்று. மிளகாய் தூள் 125 முதல் 150 கிராம், கடுகு தூள் 60 முதல் 75 கிராம் கல்லுப்பு 150 கிராம் முதல் 200 கிராம் இரண்டு தேக்கரண்டியளவு வெந்தயம். அவ்வளவுதான்.
நல்ல உருண்டை காய்களை வாங்கி நன்றாக கழுவி ஈரமில்லாமல் நன்கு துடைத்து எட்டாகவோ பதினாறாகவோ வெட்டி, கடுகு தூள் உப்பு தூள் மிளகாய்த்தூள் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு நாட்கள் காலை மாலையில் நன்கு குலுக்கி மூன்றாவது நாள் சாப்பிட்டு பிறகு சொல்லுங்கள்.எட்டாக வெட்டி போட்டிருந்தால் ஒரு தட்டு தயிர் சாதம் உள்ளே இயங்கும். பதினாறு துண்டாக போட்டிருந்தாலும் முக்கால் தட்டு தயிர் சாதம் இரங்கும். இன்னும் மாங்காய் கிடைக்கிறது, முயற்சி செய்து பாருங்கள்.

No comments:

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...