பிப்ரவரி மாதத்தில் தேட ஆரம்பித்து எங்குமே மாவடு கிடைக்காத ஏமாற்றம், மார்ச்சில் கிடைத்தது அருமையான உருண்டை மாங்காய்கள், வாங்கி வந்து சுத்தமாக கழுவி, ஈரமில்லாமல் துடைத்து பதினாறு துண்டுகள் போட்டு கல்லுப்பு, வறுத்த வெந்தயம் கடுகு மிளகாய் தூளாக்கி கலந்து நல்லெண்ணெய் ஊற்றி எடுத்து வைத்து இரண்டு நாட்கள் கழித்து ஊறிய பின், ஆஹா அருமை.
ஒரு கிலோ மாங்காய்கள் என்றால்
100 முதல் 150 கிராம் கல்லுப்பு
100-150 கிராம் மிளகாய்த்தூள்
75-100 கிராம் கடுகு தூள்
50 கிராம் வெந்தய தூள்
150-200 மி.லி நல்லெண்ணெய்
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நன்றாக கிளறி விட்டு வைத்தால் இரண்டு வருடங்களுக்கு வைத்து சாப்பிடலாம்.
முயற்சி செய்தால் பலன் உண்டு.
No comments:
Post a Comment