Friday, 18 August 2017

ஏன் பிறந்தேன் - 9

சதுராக்கினி சுழி அதன் நெற்றியில் ஜொலித்த அழகை சொல்லிக் கொண்டே போகலாம். சுற்று வட்டாரத்தில் அதன் அழகும் வேகமும் மிகவும் ப்ராபல்யம். வேதாரணியம் குண்டு வருவதற்கு முன்பாகவே காயாரோகணம் சம்மன் இருந்தது. அது ரவ்வால் அடித்தால் ஓடுகிற பஸ்ஸும் காரும் நிறுத்தி பார்ப்பார்கள். ஒரு தடவை நாங்கள் பயணம் செய்யும் போது, சுமார் 50 அல்லது 60 கிலோ மீட்டர் வேகம் இருக்கும். ஒரு கண்தெரியா வளைவில் திரும்பும் போது ஒரு பஸ் நல்ல வேகத்தில் சாலையில் வந்து விட்டது.அந்த சம்மன் கண்ணிமைக்கும் நேரத்தில் மிகவும் லாவகமாக திரும்பி எங்கள் அனைவரின் உயிரையும் காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் சிறிதும் பயமில்லாமல் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றது ஒரு பெரிய அதிசயமாகும். 

No comments:

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...