Sunday, 1 October 2017

ஏன் பிறந்தேன் 10

கோடை விடுமுறை விட்டால் கொண்டாட்டம்தான். ஒரு வருட காலமாக பிரிந்த விடுமுறைக்காலத்தில் மட்டுமே சந்திக்க முடியும். போய்வந்த திருவிழாக்கள் தெப்பங்கள் தேர்கள் பற்றியும் சினிமாக்கள் பற்றியும் பெருமையடித்துக் கொள்ளமுடியும். அரவிந்சாமி மாதிரி இவங்க மாடு பால் கறக்குதா அவங்க மாடு கன்னு போட்டுச்சான்னு தகவல் பரிமாற்றங்கள் நடக்கும். ஒவ்வொரு வருஷமும் தவறாமல் சித்திராபெளர்ணமியன்று வண்டியிலோ கால்நடையாகவோ எட்டுக்குடிக்கு சென்று பெரிய பெரிய பலாபழங்கள் வாங்கி வருவோம். மறுநாள் எங்கள் தாத்தா ஒரு பெரிய பாத்திரத்தில் பலாப்பத்தை வெட்டி சுளைகளை போட்டு அதன் மேல் பசுநெய் ஊற்றி பிறகு தேன் ஊற்றி கிளறி எங்கள் அனைவருக்கும் கொடுப்பார். வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு விளையாட கிளம்புவோம். 

No comments:

ஏன் பிறந்தேன்

கத்தரிக்காய்

கத்தரிக்காய் கத்தரிக்காய் என்றதும் நம் நினைவுக்கு வருவது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு கத்தரிக்காய் கொத்ஸு ஸ்டஃப்டு கத்தரிக்காய் இ...