இன்று ஏப்ரல் முதல் நாள் 2018, எங்கள் பகுதியில் காலை முதல் வரிசையாக பல தெரு நாய்கள் இறக்க ஆரம்பித்தன. வீடுகளில் வளர்க்கப்படும் சில நாய்களும் இறந்தன.இன்று எங்கள் வீட்டு நாய்கள் காலைமுதல் வெளியே வராமல் இருந்ததால் உயிர் பிழைத்தன. யாரோ ஒருவர் தெருமுனைகளில் விஷம் கலந்த உணவை வைத்ததை அறியாமல் உண்டு இறந்தன என்று அறிந்ததும் மனம் மிகவும் வேதனை படுகிறது. இரவு 10மணி வரை கிட்டத்தட்ட 10 பெரிய நாய்களும் 7 குட்டி நாய்களும் இறந்ததாக செய்தி. இது போன்ற செயல்கள் குற்றங்கள் நடக்க முன்னேற்பாடாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
மறுபடியும் 07.04.2018 அன்று விஷ உணவை உட்கொண்டு மிச்சம் மீதி இருந்த நாய்களும் இறந்தன. குறிப்பாக எங்களுக்கு மிகவும் பிடித்த மூன்று வயதான GSD இறந்தது அனைவரையும் மிகவும் வேதனை பட வைத்த நிகழ்வு.
No comments:
Post a Comment